Categories
தேசிய செய்திகள்

விடுதியில் இளம்பெண் கொலை…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…. போலீஸ் நடவடிக்கை….!!!!

உத்தரகாண்டில் பாஜக பிரமுகரும், முன்னாள் மந்திரிம் ஆன வினோத்ஆர்யா என்பவரின் மகன் புல்கிட் ஆர்யா ஆவார். இவருக்கு பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகில் வனந்த்ரா எனும் பெயரில் சொகுசு விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். சென்ற 18ஆம் தேதி பணிமுடிந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது சந்தேகத்தின் படி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி 4 நாட்களுக்கு பின் சென்ற 22ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல்போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில் விசாரணையில் அங்கிதாவை விடுதி உரிமையாளர் ஆன புல்கிட் ஆர்யா கொலை செய்தது தெரியவந்தது.

அதாவது அங்கிதாவை விடுதிக்கு பின்னாலுள்ள கால்வாயில் தள்ளிவிட்டு  கொலை செய்துள்ளார். இக்கொலைக்கு சொகுசு விடுதியில் பணிபுரியும் மேலும் 2 ஊழியர்கள் உடந்தையாக இருந்து உள்ளனர். அதன்பின் புல்கிட்ஆர்யா, விடுதி மேலாளர் உட்பட 3 பேரை கைதுசெய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் கொலையான அங்கிதாவின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. பின் நடந்த முதற்கட்ட விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததால் அங்கிதாவை விடுதி உரிமையாளர் புல்கிட் கொலைசெய்து கால்வாயில் வீசியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு அந்த சொகுசு விடுதியை இடித்துதள்ள முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து விடுதியின் ஒரு பக்கம் இடித்து அகற்றப்பட்டது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிதாவின் குடும்பத்தினர், பிரேத பரிசோதனை அறிக்கையை முதலில் ஒப்படைக்கும்வரை அவரது இறுதிசடங்கை நடத்தமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இது சமந்தமாக அங்கிதாவின் தந்தை கூறியதாவது, அந்த தங்கும் விடுதியில் சான்று ஆவணங்கள் இருக்கும்போது, அதனை ஏன் அரசு இடித்துள்ளது..? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், அங்கிதாவின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு மேற்கொள்ள முடிவுசெய்துள்ளனர். அதில் வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் விடுதியில் தங்கவரும் நபர்களுக்கு சிறப்பு சேவை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் என தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரிடம் அங்கிதா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், நீரில் மூழ்கி அங்கிதா இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்களும் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் குழுவின் டி.ஐ.ஜி. பி.ஆர். தேவி கூறியதாவது, விடுதியிலுள்ள பணியாளர்கள் ஒவ்வொருவரையும் விசாரணைக்கு போலீஸ் நிலையம் வரும்படி கூறி இருக்கிறோம்.  அத்துடன் அங்கிதாவின் வாட்ஸ் அப் உரையாடல்கள் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார். முறையான பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அங்கிதாவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |