கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியிருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் பட குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்கக்குளும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பாணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் பட குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் வரலாற்றை தெரிந்து கொள்வது எந்த அளவிற்கு முக்கியமானது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுக்கு பதில் அளித்து நடிகர் விக்ரம் பேசியபோது, நாம் எகிப்தில் உள்ள பிரமிடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி உள்ளார்கள் என்பது பற்றி எல்லாம் யோசிக்கிறோம். ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் உள்ளது. அதில் உயரமான கோபுரத்தை கொன்ட கோவில் என்றாலே அது தஞ்சை பெரிய கோவில் தான் சோழ மன்னர் ராஜராஜ சோழன் அந்த கோவிலை கட்டியுள்ளார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் அதுதான் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தை பார்த்து பிரமிப்படைகின்றோம் பாராட்டுகிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோவில் சுமார் 6000 வருடங்களுக்கு மேலாக பூகம்பங்களை தாங்கி இன்று வரை நிற்கிறது. அது எப்படி சாத்தியம் என்றால் முதலில் சுற்றுச்சூழல் பின்னர் ஆறடி நிலத்திற்கு தாழ்வாரம் அமைத்து அதன் மையப் பகுதியில் கோவிலை கட்டியிருக்கின்றனர் எதுவும் இல்லாமல் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொண்டு அவ்வளவு பெரிய கட்டுமானத்தை கட்டியிருக்கின்றனர்.
மேலும் ராஜராஜ சோழன் தனது காலத்தில் ஐந்தாயிரம் அணைகளை கட்டி இருக்கிறார். இலவச மருத்துவமனைகளை கட்டியுள்ளார். கடன் உதவிகளையும் வழங்கி கண்ணியமாக வாழ்ந்திருக்கின்றனர் ஆறுகளுக்கு பெண்களின் பெயர்களை சூட்டி உள்ளார், நீர் மேலாண்மைக்கும் தனி துறையை அமைத்திருக்கிறார். இதையெல்லாம் ஒன்பதாம் நூற்றாண்டில் நடந்தவை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இதெல்லாம் நடந்து சுமார் 500 வருடங்களுக்குப் பின் தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்துள்ளார். இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் வட இந்தியா தென்னிந்தியா என பிரித்து பார்க்க வேண்டாம் நாம் எல்லாம் இந்தியர்கள் அதனால் தான் இவர்களை எல்லாம் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.