சிவனின் தந்தை யார் என்று தெரியுமா..? சிவன் யார் பெற்ற மகன் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
சிவனை அனைவரும் முதன் முதலில் அறிந்தது, அவர் இமயமலையில் பரவசத்தில் ஆடி கொண்ட போதுதான். அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிவது கூட தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர்.
அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க. சிவன் வந்து அவளை மணக்க சம்மதித்தார்.
சிவன், பார்வதி தேவியின் திருமணத்தன்று என்ன நடந்தது..?
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயம் மண நாளும் வந்தது சிவன் பார்வதி திருமணம் வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது. யாரும் கனவில் கூட எண்ணிப் பார்க்காத அளவுக்கு தீவிர மனிதனானவன் தன் அங்கமாக மற்றொருவரை ஏற்க இருந்தார்.
சமுதாயத்தில் இன்னார் என்று அறியப்பட்ட எல்லோரும் அடையாளம் ஏதும் இல்லாமல், எளியோர் பாகுபாடின்றி வந்திருந்தனர். எல்லாம் உயிரினங்களும், புழு, பூச்சிகளும் அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. அதுமட்டுமா பேய், பிசாசுகள் அவற்றை சேர்ந்த அனைத்துமே வந்தனர். தேவர்களும், தேவதைகளும் வந்தனர்.
அசுரர்களும், பூதங்களும் கூட வந்திருந்தனர். பொதுவாக தேவர்கள் வந்தால் அசுரர்கள் வரமாட்டார்கள், அசுரர்கள் வருவதாக இருந்தால் தேவர்களும் வர மறுத்து விடுவார்கள். அவர்கள் ஒருவரை, ஒருவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நடக்கப்போவது சிவனின் திருமணம் என்பதால் பகையை மறந்து இம்முறை மட்டும் இருவரும் வருவதாக முடிவு செய்திருந்தனர்.
அதோடு சிவன் பசுபதி அல்லவா எல்லா உயிரினங்களுக்குமே கடவுள் ஆயிற்றே..!! அதனால் எல்லா மிருகங்களும் , புழு, பூச்சிகளும் அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. இது ராஜ வம்சத்து திருமணமாம்.. இளவரசே பார்வதியின் திருமணம் ஆயிற்று ராஜபக்ஷவே வழக்கப்படி திருமாங்கல்யம் கட்டும் முன் ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும்..
மாப்பிள்ளை யார், யார் அவர்கள் தாயார், தந்தையார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு அவனது பூர்வீகம் மிக முக்கியம். அது அவனது குலப் பெருமையும் கூட..அதனால் மிகுந்த பகட்டும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்பட ஆயிற்று.
இது நடந்து முடிய.. சிறிது நேரம் ஆனது ஒரு வழியாக அனைத்து தகவலும் சொல்லி முடிக்கப்பட்டது.. மணமகன் அமர்ந்திருந்த இடத்தை அனைவரும் திரும்பினர்.. சிவனின் சார்பாக யாரேனும் எழுந்து அவரின் குலப்பெருமை பேசுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தையும் பேசவில்லை..
சுற்றத்தாரிடமிருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப்பெருமையை விவரிக்க மாட்டார்களா..? என்று பார்வதியின் குடும்பத்தினர் சற்றும், முற்றும் பார்த்தனர்.. ஆனால் அப்படி யாருமே வந்திருக்கவில்லை. ஏனெனில் பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை.
என் நேரமும் தன்னுடன் இருக்கும் கண்களை மட்டும் தான் அவர்கள் அழைத்து வந்திருந்தார். பூத கண்களை மட்டும் தான் அழைத்து வந்திருந்தார்.. அவையும் உருக்குலைந்து பார்ப்பதற்கும் பயங்கரமாக இருந்தது.. அது போதாதா என்று அவர் கேட்க.. மனித வாசிகள் பேசத் தெரியாது என்பதால் தங்களுக்கு தெரிந்த வகையில் ஏதோ இழைந்து கொண்டிருந்தனர்..
பார்ப்பவர்களுக்கு அவை போதை மயக்கத்தில் தள்ளாடி கொண்டிருப்பது போலிருந்தது.. இந்நேரத்தில் பார்வதியின் தந்தை பர்வதராஜன் சிவனிடம் உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள் என்று வேண்டினர்.. சிவன் ஒன்றுமே சொல்லவில்லை தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்து இருப்பது போன்று சும்மா உட்கார்ந்து இருந்தார்..
அவர் மன பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோசமும் அவரிடம் தென்படவில்லை.. வெறுமையே தனது பூதகணங்களை சூழ்ந்திருக்க என்ன செய்வதென்றும் இருந்தார். அடுத்த கேள்வியும் அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது. முன்னோர்கள் யார் என்று தெரியாமல் தன் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்கள்.
நல்ல நேரம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.. அனைவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது.. அனைவரும் படபடப்புடன், கேள்விகளில் தீவிரம் அதிகமானது.. அதே கேள்வி மீண்டும், மீண்டும் கேட்கப்பட்டது ஆனால் அவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தனர்.
உயர் குலத்தில் பிறந்த அசுரர்கள், பண்டிதர்களும், இளக்காரமாக பார்த்து அவரது குலம் என்னவாக இருக்கும்.. ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்..ஒருவேளை சொல்வதற்கு கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராக இருப்பார் என்று அவர்களுக்குத் தெரிந்தது போல் வாய்க்கு வந்த வசை அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை, அவருக்கென்று பூர்வீகம் இல்லை, கோத்திரம் இல்லை, அவரிடம் எதுவும் இல்லை அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்..
நாரதர் கூறியது என்ன..?
அங்கு சபையில் அமர்ந்திருந்த நாரதர் நிலைமை கைமீறி கொண்டிருப்பதை உணர்ந்து நாரதர் தனது வீணையை எடுத்து அதில் ஒரே ஒரு கம்பி வைத்து சத்தம் எழுப்ப தொடங்கினார்.. மீண்டும், மீண்டும் அதே சத்தத்தை வாசித்துக் கொண்டிருந்தார் அதை வாசித்துக் கொண்டிருந்தார்..
நாரதன்.. இதனால் பார்வதி தேவியின் தந்தை பருவதராஜ பொறுமை இழந்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.. மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.. மாப்பிள்ளையோ சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார்.
இவரை போன்றவர்களுக்கு பெண்ணை மணமுடித்து கொடுப்பது பிரச்சினை.. போதாதென்று நீங்களும் எரிச்சல் ஊட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பி கொண்டிருக்கிறீர்கள்..
இல்லை இதுதான் உங்கள் பதிலா என்று இரைந்தார்… நாரதர் அவரை பெற்றவர்கள் யாரும் இல்லை என்று வினவினான்.. அவரின் தாய், தந்தை யார் என்று அவருக்கு தெரியாது என்கிறார் நாரதர். இல்லை அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை, அவருக்கென்று பூர்வீகம் இல்லை, அவரிடம் எதுவும் இல்லை..
அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான் என்று சொன்னார்… இதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர்.. தனது தாய், தந்தை யாரையுமே அறியாதவர்களை நாங்கள் கண்டுக்க மாட்டோம். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும்.. அல்லவா..?
அது எப்படி தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்.. நாரதர் சொன்னார் அவர் சுயம்பு தானாகவே உருவானது.. அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, அவருக்கு பூர்வீகமும் வில்லை, முன்னோர்களும் இல்லை அவர் எந்த குலத்தையும் சேர்ந்தவர்களும் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கம் இல்லை, அவருக்கு கோத்திரமும் இல்லை எந்த நட்சத்திரமும் இல்லை எந்த அதிர்ஷ்ட தேவதை முன்னோர்களும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரை காத்து நிற்க வில்லை …
அவர் அனைத்தையும் கடந்தவர்..இந்த பிரபஞ்சம் முழுவதும் தன்னில் ஒரு அங்கமாக நினைத்துக்கொண்டு யோகியாக அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டும்தான். அது சப்தம் இந்த பிரபஞ்சம் உருவாகும் முன்தோன்றியது. இந்த பிரபஞ்சம் உருவாக மூலதனமாக இருப்பதும், பெருமை படுத்துவதற்கும், செயலை ஆரம்பித்தது முதல் முதலில் உருவானது. சப்தம்..
அதன்பின்னரே படைப்பு நிகழ்ந்தது.. அது போலவே அவர் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து ஒரு ஒளியின் மூலம் தோன்றினார்.. இதை வெளிப்படுத்தும் வகையில் தான், நான் மீண்டும், மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டு இருந்தேன்.. என்று நாரதர் தன உரையை முடித்து புரிய வைத்தார்..