Categories
மாநில செய்திகள்

குஷியோ! குஷி…. அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பின் 4 முறை அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டது. இருப்பினும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. இதனால் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது அகவிலைப்படியை வழங்காததால் 86,000 ஓய்வூதியதாரர்களும், 20,000 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணியில் இருப்பவர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்கும்போது எங்களுக்கு மட்டும் வழங்க மறுப்பது நியாயமற்றது என ஓய்வூதியதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. அப்போது நிதி நெருக்கடி காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதோடு மற்ற துறைகளை விட போக்குவரத்து துறையில் நிதி பற்றாக்குறை அதிக அளவில் இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அதிக அளவு பணியாளர்கள் இருப்பதாலும் அகவிலைப் படியை வழங்கவில்லை எனவும், அகவிலைப்படி வழங்க வேண்டும் என்றால் 81 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அகவிலைப்படி உயர்வு தொடர்பான கேள்விகளை எழுப்பும் போதெல்லாம் அரசு நிதி பற்றாக்குறையை காரணம் கூறுவது ஏற்புடையது அல்ல என்றார். நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு சமீபத்தில் மட்டும் எப்படி அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது எப்படி என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஓய்வூதிய தாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை நவம்பர் மாதம் முதல் வழங்க வேண்டும் எனவும், அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட அறிக்கையை நவம்பர் மாதம் 25-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Categories

Tech |