பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி 152 உதவி பேராசிரியர்களுக்கும் இந்த விகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.
இது சம்பந்தமான வழக்கை விசாரித்து வரக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுந்தரமணியம், 2013ல், 2014, 2015 ஆண்டுகள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்கள் கல்வித் தகுதி ஆராய வேண்டும் என்று கூறி, இவர்களின் கல்வி சான்றிதழ்களை பெற்று சரி பார்க்கும்படி தமிழக கல்லூரி கல்வி இயக்கனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளை முடித்து, நவம்பர் 14ஆம் தேதி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டிருக்கக்கூடிய நீதிபதி, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறார். மேலும் தனது உத்தரவில் தகுதியற்ற கல்லூரி ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும், கல்லூரி ஆசிரியர்கள் கல்வித் தகுதி விஷயத்தில் எந்த அனுதாபமும், சமரசமும் காட்டக் கூடாது எனவும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.