ஹாரியை இளவரசர் வில்லியம் அளிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹாரி . இவர் அரச குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கையில் செயல்பட்டார். இதனால் அரசு குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மோகன் இருவரும் அரச பதவிகள் அனைத்தையும் விட்டுவிட்டு பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தற்போது வசித்து வருகின்றனர். ஆனால் இவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதிலிருந்து தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களில் அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அரசு குடும்பத்திற்கும் இளவரசர் ஹாரி மற்றும் மோகன் ஜோடிக்கும் இடையே கடுமையான உறவ நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் பிரத்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8–ஆம் தேதி உயிரிழந்தார்.
இதற்கு அஞ்சலி செலுத்துவதற்காக விண்ட்சர் கோட்டையில் காத்திருந்த நலம் விரும்பிகளை இளவரசர் வில்லியம்- கேட், இளவரசர் ஹாரி-மோகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து வந்தனர். ஆனாலும் கூட சகோதரர்கள் இடையிலான பிளவு தொடர்ந்து நீடித்து வருவதாக தெரிய வந்தது. மேலும் இது குறித்து அரச குடும்பத்தின் அடுத்த தலைமுறை பற்றி விவாதிக்கும் தி நியூ ராயல்ஸ் புத்தகத்தின் ஆசிரியரான கேட்டி நிக்கோல் இளவரசர் ஹாரியை இளவரசர் வில்லியம் மன்னிக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.