Categories
மாநில செய்திகள்

அத்துமீறி பேசிய ஆ.ராசா… கண்டிக்க பயப்படும் முதல்வர்?…. செல்லூர் கே.ராஜூ ஓபன் டாக்….!!!!!

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தன் தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் நேற்று (செப். 22) பங்கேற்றார். இந்நிலையில் பைகரா மாநகராட்சி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது “ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயரில்லை. என்னுடை பெயர்கூட ராஜாதான். எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம்விளைவிக்கும் விதமாக ஆ.ராசா செயல்பட்டு வருகிறார்.

இது போன்ற, பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய்தான் வருத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் நடந்தபோதும் திமுக தலைவர் பாராமுகமாக அமைதியாக இருக்கிறார். ஏற்கனவே சட்டஒழுங்கு மோசமாகவுள்ள சுழலில், மேலும் பாதிப்படையும் அடிப்படையில் பேசி வருகின்றனர். ஆ.ராசா எப்போதுமே வருத்தம்தரும் வார்த்தைகளை பேசுகிறார். முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு பற்றி தவறாக பேசினார். இப்போது இப்படி பேசுயுள்ளார். ஆகவே ஆ.ராசாவுக்கு திமுக தலைவர் வாய்ப்பூட்டு சட்டம் போடவேண்டும்.

அப்போது தான் தி.மு.க-விற்கு இருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பும் இருக்கும். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு ஆகியவை மறைப்பதற்காக ஆ.ராசா பேச வைக்கப்படுகிறாரா என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எதற்காக முதலமைச்சர் ஆ.ராசா விஷயத்தில் மெளனமாக இருக்கிறார் என புரியவில்லை. இதுவே அதிமுக-வினர் இப்படி பேசியிருந்தால் கடுமையான நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்திருக்கும். 2-ஜி அலைக்கற்றை குறித்த ஊழலில் பெரும்பகுதியை ராசா கொடுத்திருப்பார் போல, இதனால் அவரை கண்டிக்க பயப்படுகின்றனர் என எண்ணுகிறேன்” என்று பேசினார்.

Categories

Tech |