கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.ஜி புதூர் நேதாஜி வீதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திலகா(51) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய்(27) என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பெருமாள் இறந்துவிட்டார். இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த தலகாவும் நேற்று மதியம் தனது மகன் வெளியே சென்ற நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த விஜய் தனது தாய் மயங்கி கிடந்ததை பார்த்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு திலகாவை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.