Categories
தேசிய செய்திகள்

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இணையதளத்தில் செல்போன் முதல் வீட்டுஉபயோக பொருட்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமேசான் தளத்தில் இருந்த பிரஷர் குக்கர் ஒன்றை 2265 வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தி இருக்கின்றனர். அப்போது தான் இந்த பிரஷர் குக்கர் தரமற்றது எனவும் அதில் இந்தியத் தரச்சான்றான BIS இல்லாமல் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதன்பின் அமேசான் தளத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுகர்வோர் பாதுகாப்பு விதியை அமேசான்நிறுவனம் கடைபிடிக்கவில்லை எனக்கூறி இந்நிறுவனத்திற்கு ரூபாய். 1 லட்சம் அபராதம் விதித்தனர். அத்துடன் தரமற்ற பிரஷர் குக்கர்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் நுகர்வோருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதேபோன்று இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Categories

Tech |