Categories
மாநில செய்திகள்

BREAKING : காவேரி வேளாண் மண்டலம் ”கொள்கை முடிவு” அடிச்சு தூக்கிய அதிமுக …!!

காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு அமைச்சரவை கொள்கை முடிவு எடுத்துள்ளது.

அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு அரசின் கொள்கை முடிவுவாக எடுக்கப்பட்டது.

மேலும் வேளாண் மண்டலமகா மாற்றப்பட்டதற்கு சட்டமுன்வடிவம் நாளை கொண்டுவர பட இருக்கின்றது. இதனால் இனி காவேரி டெல்டா பகுதியில் எந்த ஒரு நாசகர திட்டமும் அனுமதிக்கப்படாது. முதல்வர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்ததை தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

Categories

Tech |