பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்துவுக்கு வாய்ப்பளிக்காதது குறித்து இயக்குனர் மணிரத்தினம் விளக்கம் அளித்துள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது. மேலும் படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். தற்பொழுது படத்தின் பிரமோஷன் பணிகள் விருவிருப்பாக நடந்து வருகின்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்து இல்லாதது ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. மணிரத்தினம் வைரமுத்து இடையே என்ன பிரச்சனை? பல வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி திரைப்படத்தில் இணையானது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில் இது குறித்து மணிரத்னம் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ரோஜா திரைப்படத்திலிருந்து அவர் எங்களுடன் பயணித்துக் கொண்டிருந்தார். எங்களின் கூட்டணியில் பெரிய ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கின்றது. அதே நேரத்தில் தமிழில் வைரமுத்துவை போல பல கவிஞர்கள் இருக்கின்றார்கள். அவரை விட திறமையானவர்களும் இருக்கின்றார்கள். புதிய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதால் இத்திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். வைரமுத்துவை விட பல திறமையானவர்கள் இருக்கின்றார்கள் என மணிரத்தினம் கூறியதை இணையதள வாசிகள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.