Categories
தேசிய செய்திகள்

காரில் சீட் பெல்ட் கட்டாயம்….. மீறினால் அபராதம்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

காரின் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில் அமருபவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அக்டோபர் ஐந்தாம் தேதி வரை கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது.

இந்திய தொழில் அதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த விதிகளை கொண்டு வந்துள்ளது. இது குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதன் கட்கரி தெரிவித்ததாவது காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |