Categories
உலகசெய்திகள்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் ஏற்பட்ட கோளாறு… தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்ட புவி கண்காணிப்பு பணி…!!!!

அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியிலிருந்து 1.50 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொலைநோக்கி இதுவரை காணாத விதமாக பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கில் பொருத்தப்பட்டிருக்கின்ற மிட் இன்ப்ராநெட் இன்ஸ்ட்ருமென்ட் எனப்படும் கருவியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் எம்ஐஆர்ஐ கருவியில் நான்கு கண்காணிப்பு முறைகள் இருக்கிறது. இவற்றில் மீடியம் ரெசல்யூஷன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி கடந்த 24ஆம் தேதி அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் போது அதிக அளவிலான உராய்வை காட்டியதாக நாசா கூறியுள்ளது. மேலும் இதனை ஆராய்ந்து சரி செய்ய கடந்த ஆறாம் தேதி நிபுணர் குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது சீரமைக்கப்படும் வரை தொலைநோக்கியின் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக நாசா கூறியுள்ளது.

Categories

Tech |