அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியபோது, இன்று தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடங்கி இருக்கிறது. சளி, தலைவலி, இருமல் இருப்பவர்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
டெங்கு ப்ளூ காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் எந்த பகுதியில் ஆவது மூன்றிற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருக்குமானால் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய டாக்டர்கள் இருக்கின்றனர். 1000 மருத்துவர்கள் காலி இடங்களை நிரப்பும் பணி தீவிர படுத்தப்பட்டிருக்கிறது மேலும் சூனம்பேடு அரசு சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வந்த பெண் வேறு இடத்திற்கு மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்திருக்கின்றனர். பிரசவத்தின் போது குழந்தை இறந்த விவகாரத்தில் மருத்துவர் செவிலியர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் பிரசவ நேரத்தில் மருத்துவர் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.