நவராத்திரி என்பது முழு ஷரத் நவராத்திரி என்று உச்சரிக்கப்படுகிறது. அதாவது முழு ஷரத் என்பது சமஸ்கிருதத்தில் ஒன்பது இரவுகள் என்பதாகும். குறிப்பாக இந்து மதத்தில் தெய்வங்களை கௌரவிக்க பல திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் ஒன்று தான் நவராத்திரி ஆகும். இந்த திருவிழா பொதுவாக செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் 9 நாட்களில் நிகழ்கிறது. இது பெரும்பாலும் முடிவடைகிறது 10வது நாளில் தசரா அதாவது விஜய தசமி கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் தசரா தான் விழாவின் மையப் புள்ளியாகக் கருதப்படுகிறது. தசரா அன்று அதாவது 9வது நாளில் நவராத்திரி என்றும் அழைக்கப்படும் நான்கு திருவிழாக்கள் வருடத்தின் பல்வேறு கட்டங்களில் நடத்தப்படுகின்றன. இருப்பினும், ஆரம்ப இலையுதிர்காலத்தில் நடத்தப்படும் விழா ஷரத் நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இதுவே துர்கா விழா ஆகும். இது குறிப்பாக சில கிழக்கு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. பலருக்கு இது மத சிந்தனை மற்றும் உண்ணாவிரதத்தின் நேரம் ஆகும். ஆனால் மற்ற சிலருக்கு இது நடனம் மற்றும் விருந்துக்கான நேரம் ஆகும். விரத பழக்கவழக்கங்களில் கடுமையான சைவ உணவைக் கடைப்பிடிப்பது மற்றும் மது மற்றும் சில மசாலாப் பொருட்களைத் தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக, திருவிழாவின் ஒன்பது இரவுகள் ஓவ்வொரு பெண் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. பொதுவாக திருவிழாவின் முதல் மூன்றில் ஒரு பங்கு தெய்வத்தின் அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.அது துர்கா, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகும்.
பெரும்பாலும் தெய்வங்களுக்கும் அவற்றின் பல்வேறு அம்சங்களுக்கும் பிரசாதம் படைக்கபடுகிறது. மேலும் தெய்வங்களின் மரியாதைக்காக சடங்குகள் செய்யப்படுகின்றன. ஒரு பிரபலமான சடங்கு எட்டாவது அல்லது ஒன்பதாம் நாள் நடைபெறும் கன்யா பூஜை தான். இந்த சடங்கில் ஒன்பது இளம்பெண்கள் நவராத்திரியின் போது கொண்டாடப்படும் ஒன்பது தேவியின் அம்சங்களாக உடையணிந்து, முறைப்படி அவர்களுக்கு பாதம் கழுவி வழிபட்டு உணவு, உடை போன்ற பிரசாதம் வழங்கப்படுகின்றனர். சில பகுதியில் தசராவும் நவராத்திரியில் சேகர்க்கப்படுகிறது, மேலும் 10 நாள் கொண்டாட்டம் முழுவதும் தசரா என்ற பெயரிலேயே அறியப்படுகிறது. திருவிழா முழுவதும் அல்லது 10 வது நாளாக இருந்தாலும், தசரா என்பது மகிஷாசுரனை துர்க்கை வென்றது போன்ற தீமையின் மீது நன்மையின் வெற்றிகளைக் கொண்டாடும் நேரமாகவே கருதப்படுகிறது.