உத்தரபிரதேசம் மாநிலத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையிலிருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ செப்டம்பர் 16ம் தேதி சஹாரன்பூரில் நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியின்போது சில வீரர்களால் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கழிவறை போன்ற தோற்றத்திலுள்ள அறையில் இருந்து பல பாத்திரங்களிலிருந்து மாணவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை எடுத்து செல்லப்படுவதை வீடியோக்களில் காட்டப்படுகிறது. அந்த 1 நிமிட வீடியோவில் பிரேமில் சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்கள் காட்டப்படுகிறது.
அதன் வாயிலுக்கு அருகிலுள்ள கழிப்பறைத் தரையில் வைக்கப்பட்டுள்ள சாப்பாடு காண்பிக்கப்படுகிறது. பின் மீண்டும் விளையாட்டு வீரர்கள் உணவை எடுத்துக் கொண்டு கழிப்பறைக்கு வெளியே செல்வதைக் காணமுடிகிறது. 2வது வீடியோவில் ஊழியர்கள் பாத்திரங்களை உணவு சமைக்கப்படும் நீச்சல்குளத்தின் அருகில் வெளியே கொண்டு வருவதைக் காட்டுகிறது. சஹாரன் பூரின் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா, இட நெருக்கடி காரணமாக உணவு மாற்றும் அறையில் (கழிவறை) வைக்கப்பட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
அத்துடன் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை கழிவறையில் வைக்கவில்லை. மழை பெய்ததால் நீச்சல்குளம் பகுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்தோம். நீச்சல் குளத்துக்குப் பக்கத்திலுள்ள உடை மாற்றும் அறையில் உணவு வைக்கப்பட்டது. ஸ்டேடியத்தில் சில கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது. மழை காரணமாக உணவு வைப்பதற்கு வேறுஇடம் தேவைப்பட்டது என கூறப்படுகிறது. கபடி வீரர்களை அவமரியாதை செய்யும் அடிப்படையில் வைரலான வீடியோக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பாஜகவைத் தாக்கி வருகின்றன.