Categories
தேசிய செய்திகள்

உணவு ஆர்டர் செய்த இளம் பெண்…. டெலிவரி ஊழியர் செய்த செயல்….. பெரும் பரபரப்பு…..!!!

மராட்டிய மாநிலம் புனேயின் யெவலேவாடி கடந்த 17ஆம் தேதி ஒரு 19 வயது இளம் பெண் சோமாட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். அதன் பிறகு இரவு 9:30 மணிக்கு சோமாட்டோ டெலிவரி ஊழியர் ரயீஸ் ஷேக்(40) என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். உணவு டெலிவரி செய்த பிறகு நன்றி என்று கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் இரண்டு முறை முத்தமிட்டு உள்ளார். மேலும் சிறுமியிடம் தண்ணீர் கேட்டார். அந்த பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்ததும், அவர் பெண்ணை அருகில் இழுத்து துன்புறுத்தியுள்ளார்.

அதனைதொடர்ந்து ரயீஸ் அந்த பெண்ணிடம், நான் மாமாவை போன்றவர் என்றும் ஏதாவது வேண்டுமானால் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு கிளாஸ் தண்ணீரில் கேட்டு இளம் பெண்ணை துன்புறுத்தி உள்ளார். உடனடியாக அந்த பெண் உதவி கேட்டு சத்தம் போட்டு உள்ளாரா. இதனையடுத்து ரயீஸ் தப்பி ஓடினார். ஆனால் வீட்டு வசதி சங்கத்தை சேர்ந்த சிலர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் ரயீஸ் மீது ஐபிஎஸ்சி 354 மற்றும் 354 ஏ பிரிவுகளில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |