தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோவில் தெருவில் தி.மு.க பிரமுகரான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவுடியான லோகம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது லோகம்மாள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனால் படுகாயமடைந்த சதீஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சதீஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லோகம்மாளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.