Categories
மாநில செய்திகள்

சூப்பில் மிதந்த “ஈ”…. ஷாக்கான மருத்துவர்…. கூலாக பதில் சொன்ன ஹோட்டல் ஊழியர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பிரபலமான அடையார் ஆனந்த பவன் சைவஉணவகமானது செயல்பட்டு வருகிறது. இங்கு பிசியோ தெரபி மருத்துவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது உணவு சாப்பிடுவதற்கு முன் சர்வர் ஸ்வீட்கான் வெஜ்சூப் கொடுத்துள்ளனர். அதை மருத்துவர் ஸ்பூன் வாயிலாக கிளறிய போது சூப்பிலிருந்து “ஈ” ஒன்று வெளியே மிதந்து வந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்டார்.

அப்போது ஊழியர் அலட்சியமாக ஈ -யை எடுத்து கீழே போட்டுவிட்டு குடியுங்கள் என பதில் அளித்ததால் கோபமடைந்த மருத்துவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அதனை செல்போன் வாயிலாக வீடியோ எடுத்து விட்டு அதற்குண்டான பில் தொகையையும் வழங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் சென்ற 2 மாதங்களுக்கு முன் இரண்டு மாணவர்கள் நியூ 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் போன்ற அசைவ உணவகத்தில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு உயிரிழந்தனர். பின் மீண்டும் சென்ற வாரம் ஆரணி பாலாஜி பவன் சைவ உணவகத்தில் பார்சல் சாப்பாடு வாங்கி எடுத்துச் சென்று பிரித்து பார்க்கும்போது பீட்ரூட் பொரியலில் எலித்தலை இருந்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது திருவண்ணாமலை பிரபல அடையார் ஆனந்தபவன் உயர்தர சைவ உணவகத்தில் சூப் இல் “ஈ” இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகரிலுள்ள பச்சையம்மன் கோயில் தெருவில் வசித்துவரும் ராஜேஷ் என்பவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபி பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் 2 நண்பருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட வந்தபோது சூப்பில் “ஈ” இருந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |