Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்”….. பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!!

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்களின் உடலை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பரத் உள்ளிட்டோர் சென்ற 17ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சதீஷ் மற்றும் பரத் உள்ளிட்ட இருவரையும் தேடினார்கள்.

ஆனால் இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியை கைவிட்டார்கள். இந்த நிலையில் இருவரின் உறவினர்களும் நேற்று முன்தினம் காலை கரடிப்பாக்கம் பேருந்து நிலையம் முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் திருச்சி-சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரு இளைஞர்களையும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |