Categories
மாநில செய்திகள்

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சிறப்பு கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு, தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கலாம்.

பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல், கற்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் முன்வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் இங்கு விவாதிக்கலாம். பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக கிராம பஞ்சாயத்துகளின் ஆலோசனை பெற்று எடுக்கப்பட்ட முடிவுகளை மீண்டும் அடுத்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்” என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |