Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயம் அடைந்த 9 பேர்…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு திருமயம் வழியாக புதுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் நம்மணசமுத்திரம் பைபாஸ் சாலையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல பேருந்து திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டாரஸ் லாரி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பேருந்து, லாரி ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |