Categories
தேசிய செய்திகள்

JIO சிம் பயன்படுத்துபவரா நீங்கள்?… அதிர்ச்சி தரும் எச்சரிக்கை ….. உஷாரா இருங்க…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது,உங்கள் மொபைல் எண்ணின் கேஒய்சி பூர்த்தி செய்யும் படி மோசடி செய்திகள் வருவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மின்னஞ்சல் அல்லது எஸ் எம் எஸ் மூலமாக பெறப்படும் சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம்.ஓடிபி மற்றும் பிற நிதி தகவல்கள் போன்ற ரகசிய தகவல்களைத் திருடன் மோசடி செய்பவர்கள் உங்கள் சாதனத்தை பிரதிபலிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இ கேஒய்சி அப்டேட் என்ற போர்வையில் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு பற்றிய தகவல்களைப் பெற்று சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாகவும், மேலும் வாடிக்கையாளர்களின் ஃபோனில் தேர்ட் பார்ட்டி செயலிகளை இன்ஸ்டால் செய்ய வைத்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாகவும் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |