Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்கள் கொடுத்த சர்பிரைஸ் பரிசு….. தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை….. அப்படி என்ன கொடுத்தான்கப்பா….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய தந்தை இறந்து விட்ட நிலையில் இவருக்கும் மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆம் தேதி கோயிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இதன் பிறகு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இவர்களுக்கு திருமண வரவேற்பு நடை பெற்றுள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் வருகை தந்து மணமக்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்தினார்கள்.

இந்த நிலையில் நண்பர்கள் அறிவழகன் தந்தையை உருவப்படத்தை பேனர் அச்சடித்த கட்அவுட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர். இதனை பார்த்த அவர் தேம்பி தேம்பி அழுதுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |