சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
திருவள்ளுரை அடுத்திருக்கும் திருவாலங்காடு மற்றும் மோசூர் ரயில் நிலையம் இடையே நேற்று காலை 7 மணி அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் அரக்கோணம் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே வழித்தடத்திலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் ரயிலில் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். பின் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.