Categories
சினிமா

குரோர்பதி நிகழ்ச்சி: ரூ.1 கோடியை வென்ற +2 வரை படித்த பெண்மணி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

கோன் பனேகா குரோர்பதி 14 என்ற குவிஸ் நிகழ்ச்சி (கேள்வி பதில்) சென்ற ஆகஸ்டு 7-ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவற்றில் பலபேர் போட்டியாளர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியை நடிகர் அமிதாப்பச்சன் கேள்விகள் கேட்டு வழிநடத்துகிறார். இதன் முதல் எபிசோடில் பிரபலங்கள் பல பேர் பங்கேற்றனர். நடிகர் ஆமீர்கான் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் விளையாட்டு வீரர் சுனில் சேத்ரி, மேஜர் டி.பி. சிங், வீரதீர விருது பெற்ற முதல் பெண் அதிகாரியான மிதாலி மதுமிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக கவிதா சாவ்லா என்ற பெண் ரூபாய்.1 கோடி பரிசு தொகையை வென்று சாதித்துள்ளார். மராட்டிய மாநிலத்தின் கோலாப்பூரில் வசிப்பவர் கவிதா. இல்ல தலைவியாக இருந்துவரும் அவர் பிளஸ்-2 வரையே படித்துள்ளார். இருப்பினும் சாதனை செய்வதற்கான முயற்சியில் அவர் வெற்றிபெற்றுள்ளார். அத்துடன் மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். குரோர்பதி நிகழ்ச்சி திங்கள் -செவ்வாய் கிழமைகளில் இரவு 9 மணிக்கு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இத்துடன் நிகழ்ச்சி முடியவில்லை. அடுத்த கேள்விக்கு கவிதா சரியாக பதில் கூறினால் அவர் ரூ7.5 கோடி பரிசு தொகையை வெல்வார்.

Categories

Tech |