அக்டோபர் 17ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவது குறித்து எம்ஜிஆர் உடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்த கட்சி ஆரம்பிப்பதற்கு முதல் காரணம் நாட்டில் எங்கே பார்த்தாலும் அச்ச நிலவி வருகிறது என்ன பரிகாரம் என்பது குறித்து தேடி கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடுபவர்களுக்கு இந்த இயக்கம் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கத்தை நாங்கள் துவங்கியுள்ளோம். இந்த கட்சியின் நோக்கம் எதிர்காலத்தில் லஞ்சமும், ஊழலாம் அற்ற அரசு உருவாக்க வேண்டும். மதுவிலக்கு ரத்து செய்தால் தவிர இந்த நாட்டில் உள்ள இளைஞர்களை காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு குடும்பங்கள் செயல்படாமல் இருக்கிறது, அவைகளை மாற்றி அமைக்க வேண்டும். இது எங்களது பிரதான கொள்கை.
அதனை தொடர்ந்து கல்வி எந்த அளவில் இருந்தாலும் சரி மருத்துவமாக, பொறியியலாக இருந்தாலும் முழுவதும் தகுதி உள்ளவர்களுக்கு அரசாங்கமே இலவசமாக கல்வி கொடுக்க வேண்டும். தனியாருக்கு கொடுத்துவிட்டு அவர்கள் கொள்ளை அடிப்பதற்கு வழிவகை செய்ததை நீக்கி அதனை பொதுவுடமையாக்கி படிப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனை தட்டி கலைத்தால் அரசியல் நடப்பதற்கு தகுதி இல்லை. அதன் பிறகு எம்ஜிஆர் உயிர் எழுதும் போது இந்த கட்சியை நம்பிக்கை வைத்து எழுதவில்லை. கட்சி சரியா நடத்த முடியவில்லை என்றால் இந்த சொத்துக்களை எல்லாவற்றின் வருவாயை வாய் பேச முடியாத, காது கேட்காத பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதினார். இதனை எழுதியதற்கு காரணம் கட்சி இருக்கும் என்று நம்பிக்கை அவருக்கு இல்லை.
அதனைத் தொடர்ந்து இறப்பதற்கு ப10 நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கினார். வயதுக்கு மீறி அதிகாரத்தை கொடுத்தது நான் வாழ்க்கையில் செய்தது மிகப்பெரிய தவறு. எனவே யாரும் அந்த அம்மையோடு எந்தவித தொடர்பும் கூடாது என்று தெரிவித்தார். ஆனால் சிலர் பதவிக்காக அந்த அம்மையாரை வைத்துக் கொண்டால்தான் பதவி சுகம் காணலாம் என்று உருவாக்கினார்கள். அதிமுக காரர் கையில் அண்ணா படம் இல்லை, எம்.ஜி.ஆர் படமும் இல்லை. இந்த அம்மையார் படம் மட்டும் தான் உள்ளது. அவர்களுக்கு அண்ணாவையும் தெரியாது, எம்ஜிஆரையும் தெரியாது. அதிமுகவை விட்டு வெளியே வந்த பிறகு நாங்கள் அதிமுகவை ஒரு இயக்கமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஒரு கொள்ளை கூட்டமாக தான் இருக்கின்றது. இதனையடுத்து திமுகவின் செயல்பாடு எப்படி இருக்குது என்று கேள்விக்கு கேட்கப்பட்டது. அதற்கு அவர், திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான். இதில் எந்தவித வித்தியாசமும் இருப்பதாக கருதவில்லை என்று தெரிவித்தார்.