Categories
தேசிய செய்திகள்

லம்பி தோல் தொற்று நோய்..! 126 கால்நடைகள் பலி…. மனிதர்களுக்கு பரவுமா?… கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம்….!!!!

மராட்டிய மாநிலத்தை கால்நடை லம்பி தோல் தொற்றுநோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த மாநிலத்தில் அதிகரித்துவரும் கால்நடை தோல் நோயைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான செயற்குழுவை மாநில அரசு உருவாக்கி இருக்கிறது. அம்மாநிலத்தில் லம்பி வைரஸ் தோல் நோயால் 126 கால்நடைகள் இறந்துள்ளது. அத்துடன் மாநிலத்தின் 25 மாவட்டங்கள் லம்பி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை நேற்று தெரிவித்தது. மராட்டிய அரசு சார்பாக ஐஏஎஸ் அதிகாரி சசீந்திர பிரதாப் சிங் கூறியதாவது “அதிகபட்சம் ஜல்கான் மாவட்டத்தில் 47 கால்நடைகள் லம்பி தோல் நோயால் இறந்துள்ளது.

லம்பி தோல் நோய் (எல்.எஸ்.டி) வேகமாகப் பரவி வருகிறது என்றாலும், விலங்குகள் வாயிலாகவோ (அல்லது) பசுவின் பால் மூலமாகவோ மனிதர்களுக்கு இது பரவுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். கால்நடை பராமரிப்புத்துறையின் அறிக்கைப்படி, இந்த சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு மாவட்டத்துக்கு தலா ரூபாய்.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தோல்நோய் பரவலை தடுக்க மாநிலம் முழுதும் கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளது. மொத்தம் 1.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவேண்டும். அதில் சுமார் இதுவரையிலும் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈக்கள், கொசுக்கள், உண்ணிகள் வாயிலாக நோய் பரவி வருவதால், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க கிராம பஞ்சாயத்துகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

Categories

Tech |