Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கலில் நடைபெற்ற சைக்கிள் போட்டி”… தொடங்கி வைத்த ஆட்சியர்…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு…!!!!!

நாமக்கல்லில் நடைபெற்ற சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருக்கும் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த சைக்கிள் போட்டியானது 13 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் என போட்டி நடத்தப்பட்டது.

ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போட்டியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா முன்னிலை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு 5000, இரண்டாம் பரிசு 3000, மூன்றாம் பரிசு 2000, 4 முதல் 10ம் இடம் வரை பெற்றவர்களுக்கு 250 ரூபாய்க்கான காசோலையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வழங்கப்பட்டது.

Categories

Tech |