Categories
மாநில செய்திகள்

6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ ஜி பாபு காவல் தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனி விஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராகவும்,சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராமகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராகவும், குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராகவும்,குடிமை பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு சற்று முன் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |