Categories
பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ 88 உயர்வு..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 88 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது . இதையடுத்து இன்று சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 11 ரூபாயும், சவரனுக்கு 88 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 88 உயர்ந்து ரூ 31,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 11 உயர்ந்து ரூ 3,913-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து  ரூபாய் 50.40-க்கு  விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை  அடைந்துள்ளனர்.

Categories

Tech |