Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. மதுரையில் ரூ.600 கோடியில் டைட்டில் பூங்கா….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!

மதுரை மேரியான் ஓட்டலில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற ‘மதுரை மண்டல மாநாடு’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு முதல்வர் விருது வழங்கினார். மேலும் தொழில் நிறுவனங்களை நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் “தமிழ்நாடு பதிவு சட்ட திருத்தம்” செய்து அதற்கான ஆன்லைன் வசதியும், வாடகை ஒப்பந்த பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ததற்கான வசதியும் தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து சிட்கோ நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகள், கரூர் மாவட்டம், புஞ்சைகாளகுறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.93 கோடி செலவிலும், ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொதுவசதிக் கட்டிடங்கள், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம், கேர் திட்டம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி வழங்குதல், தமிழ்நாடு அரசு கடன் உத்தரவாத திட்டம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தொழில் வளர்ச்சி என்கின்ற போது அது பெரிய தொழில்கள் மட்டுமல்ல குரு சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் உள்ளடக்கிய தான் இந்த தொழில்கள் மூலமாக தான் ஏராளமானவர்களை வேலை கிடைக்க பல லட்சம் குடும்பங்கள் வாழும் அதன் அடிப்படையில் இவற்றின் வளர்ச்சி தமிழக அரசு முக்கியமானதாக கருதுகிறது. மேலும் நாட்டில் எளிமையாக தொழில் புரிதல் பட்டியலில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருக்கிறது இப்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது அடுத்து முதல் இடத்தை பிடிப்பது நமது இலக்கு என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் 2000-ம் ஆண்டு கருணாநிதி, சென்னையில் திறந்து வைத்த டைடல் பூங்கா, மாநிலத்தினுடைய தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியை தமிழ்நாட்டின் 2 ஆம் மற்றும் 3 ஆம் நகருக்கு எடுத்துச் செல்ல, டைடல் நிறுவனம், கோவையில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கியது.

அதன்பிறகு திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்களை அரசு உருவாக்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பின்டெக் போன்ற அறிவுசார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து ஒரு முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால், இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக, ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில், 5 ஏக்கரில் இது அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மேலும் 5 ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும். இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் பின்டெக் மற்றும் தகவல் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அது வழிவகுக்கும். முதல் கட்டத்தில், 10 ஆயிரம் பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர்.

Categories

Tech |