Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கள்ளக்காதலுக்கு இடையூறு” 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கவிதா(32) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ரசூல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். இந்த தம்பதியினருக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கவிதா எழும்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கவிதாவுக்கும் வடபெரும்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜேஷ்(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இந்நிலையில் 2 மகன்களும் வளர்ந்து விட்டதால் கள்ளக்காதலை கைவிட முடிவு செய்த கவிதா அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராஜேஷ் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கவிதாவின் மகன்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு எடுத்தார்.

அதன்படி நேற்று முன்தினம் கவிதா வீட்டில் இல்லாத நேரம் ராஜேஷ் அங்கு சென்று 2 மகன்களுக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அதனை ராஜேஷ் குடித்தார். இதனை அடுத்து வீட்டிற்குள் மயங்கி கிடந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். கவிதாவின் 2 மகன்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |