ஒடிசாவை சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட் நாயக் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு 1,213 மண்பாண்ட தேநீர் கோப்பைகளை கொண்டு பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் ஐந்து அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 5 டன் மணல் அளவு பயன்படுத்தப்பட்டு இந்த மாபெரும் மணல் சிற்பம் கடற்கரையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடிஜி என்னும் வாசகத்தை எழுதியிருக்கிறார். மேலும் சுதர்சன் பட் நாயக் இது பற்றி பேசும்போது, பிரதமர் மோடி ஒரு தேநீர் விற்பவராக இருந்தது முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தை காட்ட இந்த மண்பாண்ட தேநீர் கோப்புகளை பயன்படுத்தி இருக்கிறோம். எனது கலை மூலம் பிரதமருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என கூறியுள்ளார்.
Categories
“தேனீர் விற்பவராக இருந்தது முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணம்”… 1,000க்கும் மேற்பட்ட தேநீர் கோப்பைகளால் மணல் சிற்பம்…!!!!!
