Categories
உலக செய்திகள்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்…. அதிபர் பதவியை கைப்பற்றிய உல்ப் கிறிஸ்டெர்சன்…. வெளியான தகவல்கள்….!!!!

நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டில்  நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சியும், சுவீடன்  ஜனநாயக கட்சியும் போட்டியிட்டது. இதனால் அங்கு கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பிரதமர் மதனலேகா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சியை விட சுவீடன் ஜனநாயக கட்சி 3  இடங்களை கூடுதலாக பெற்று வெற்றி பெற்றது. அதாவது தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 175 இடங்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சி 173 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இதனையடுத்து எதிர்க்கட்சி 176 இடங்களைப் பெற்று  வெற்றி வாகை சூடியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மதனலேனா  ஆண்டர்சன் கூறியதாவது. நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு 3  இடங்கள்  கூடுதலாக கிடைத்துள்ளது.

இது ஒரு மெல்லிய பெரும்பான்மை. ஆனாலும் அது ஒரு பெரும்பான்மை தான் என தெரிவித்தார். மேலும் இவர் நேற்று தனது ராஜினாமாவை அறிவித்தார். அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் 4  கட்சிகளின் பூரண ஆதரவை பெறவில்லை. அதனால் மிதவாதி கட்சியின் தலைவர் உல்ப்  கிறிஸ்டெர்சன்  புதிய பிரதமராகிறார். இதுகுறித்து உல்ப்  கிரிஸ்டெர்சன்  கூறியதாவது. நான் புதிய அரசை அமைப்பேன். மேலும் சுவீடனுக்கும், அனைத்து குடிமக்களுக்கும் வலுவான அரசை உருவாக்குவதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |