அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் யூனியன் மில் சாலையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசிய போது தாய் தான் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைக்க முடியும். ஆனால் அண்ணா ஒருவர்தான் தன் தாய் நாட்டிற்கு பெயர் வைத்தவர். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது ஸ்டாலின் ஆட்சியில் மின்கட்டண உயர்வு காரணமாக தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றது. செந்தில் பாலாஜி ஒருவர் போதும் திமுகவை முடித்து விடுவார், திராவிடம் மாடல் ஆட்சி என கூறிக்கொண்டு ஹிட்லரையே மிஞ்சிவிடும் அளவிற்கு பணியாற்றி வருகின்றார்.
மின் கட்டண உயர்வு சொத்துவரி உயர்வு பற்றி கூட்டணி கட்சிகள் மௌனம் காத்து வருகின்றனர். மேலும் கூண்டோடு அவர்கள் தோல்வியை சந்திப்பார் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையாததற்கு எடப்பாடி பழனிசாமி 100 சதவீதம் பொறுப்பு. மீண்டும் தலைமை குழு கூடி முடிவெடுத்து பெறவேண்டியதை பெற்றுக் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின கூட பொதுச் செயலாளராகவும் அறிவிப்பார்கள். மேலும் எம்ஜிஆரால்தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு ஜாதி மதம் கடந்த கட்சியை தற்போது வட்டார கட்சியாக மாற்றியுள்ளனர். பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்ற சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் இருக்கின்றார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நரிகளாக அனைவரும் மாறிவிட்டார்கள். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களால் அடுத்த தேர்தலுக்கு அவர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குறி 2024 ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தலில் நமது கணக்கே தொடங்குவோம் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் நாம் இருப்போம் என பேசி உள்ளார்.