Categories
Uncategorized

“இவர் கண்டிப்பாக சிறைக்கு செல்வார்”…. மீண்டும் சிக்கலில் சிக்கிய செந்தில் பாலாஜி…. பதற வைத்த எம்.ஆர்.விஜய் பாஸ்கர்…..!!!

தமிழகம் முழுவதும் நேற்று அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கரூர் புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எடப்பாடியார் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் திமுகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார். நீதிமன்றம் சென்று எப்படியாவது கட்சி தலைமை பதிவை பிடித்து விட வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. திமுகவை பொருத்தவரை அதிமுக பிளவுப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் அவர்களே ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களது கனவு நிறைவேறாது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார். ஓ.பன்னீர் செல்வத்திடம் கையெழுத்து கேட்கும்போது உடனே அம்மா நினைவிடத்திற்கு சென்று தர்மயுத்தம் என்ற பேரில் போராட்டம் நடத்தினார். அதன் பிறகு எந்த காரணத்தை கொண்டும் மன்னார்குடி கும்பல் சசிகலாவுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்று கூறினார். ஆனால் இன்று மன்னார்குடி கும்பலுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் உள்ளார். தேவைப்பட்டால் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திப்போம் என்று கூறி வருகிறார். இவற்றையெல்லாம் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதனையடுத்து தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண அமலுக்கு வரும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதலில் கூறியது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஒன்றறை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

இதற்கு இடையில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்கள் சுமையை அதிகரித்துவிட்டனர். மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைக்கக் கூடிய வகையில் தான் ரெய்டு சம்பவங்கள் நடைபெற்றது. எல்லாம் மக்களை திசை திருப்பும் வேலை தான். இதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தார். இது குறித்த வழக்கில் அவர் சிறை செல்ல போவது உறுதி. தற்போது இரண்டு கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று கூறி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்ய தயாராகி வருகின்றனர். இவை அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் விரைவில் தமிழகத்திற்கு அதிமுகவால் விடிவு காலம் பிறக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |