இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீட்டா ரக சிறுத்தை இனம் அழிந்து இருக்கிறது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952 ஆம் வருடம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவிற்கு நமீபியா வழங்குகின்றது. மேலும் 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு விமானம் மூலமாக வருகிற 15ஆம் தேதி காலை ராஜஸ்தானின் ஜெய்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நமீபியாவின் வின்ட் ஹாக் நகரில் இருந்து இந்திய தூதரகம் திடரில் பதிவிட்டுள்ள செய்தியில் துணிச்சலான தேசத்திலிருந்து புலிகள் தேசத்திற்கு நல்லெண்ண தூதர்களை அழைத்துச் செல்ல விமானம் வந்துவிட்டது என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விமானத்தின் முன் பகுதியானது புலியின் முகத்தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெய்பூருக்கு வரும் இந்த சிறுத்தைகள் அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணா தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது இந்த 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி செப்டம்பர் 17 லவ் அவரது பிறந்தநாள் அன்று பூங்காவில் விடுவிக்கின்றார்.