Categories
மாநில செய்திகள்

“காலை உணவு திட்டம்”… எந்த நாட்களில் எந்தெந்த உணவுகள்…. இதோ முழு பட்டியல்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து பள்ளிக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். இந்நிலையில் அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ந்த முதல்வர், எவ்வளவு நிதிச் சிக்கல் வந்தாலும் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தன்னுடைய இலக்கு என கூறினார்.

முதற்கட்டமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் துவங்கப்படும் இத்திட்டம் படிப்படியாக மாநிலம் முழுதும் இருக்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் தினசரி காலையில் பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப்பட்டியல் வெளியாகி இருக்கிறது.

உணவுவகைகள்

திங்கள்: அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்.

செவ்வாய்: ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.

புதன்: வெண்பொங்கல், ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்.

வியாழன்: அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்

வெள்ளி: ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, ரவா கேசரி, சேமியா கேசரி.

வாரத்தில் குறைந்தது 2 தினங்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி.

முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல்வரின் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவியர் காலை உணவை சாப்பிட இருக்கின்றனர். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல் 8.50 மணிக்குள் காலை உணவு வழங்கப்பட உள்ளது. சமையலுக்கு உள்ளூர் சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் பள்ளி மேலாண்மைகுழு, சமைக்கப்படும் உணவை தினசரி ருசி பார்த்து மேலாண்மை செய்ய வேண்டும்.

Categories

Tech |