இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் கடந்த மாத நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகினார். இதனையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் ரன்வீர் சிங் நிவாரண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் குறித்து போலீசார் தண்ணீர் சிங் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியான விவகாரத்தில் தனது போட்டோ மார்பில் செய்யப்பட்டுள்ளது நடிகர் ரன்வீர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, நான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. எனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக ரன்வீர் சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த புகைப்படத்தை தடவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.