Categories
தேசிய செய்திகள்

சீர்காழி இரட்டை கொலை வழக்கு… தீரன் பட பாணியில் பிடித்த போலீசார்… பெரும் பரபரப்பு….!!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் தன்ராஜ் சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான பூர்வீகமாகக் கொண்டு கடந்த 15 வருடங்களாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகின்றார். மேலும் இவர் பூம்புகார் கருமக்குளம் பகுதியில் நகை அடகு கடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகின்றார். இந்த சூழலில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 27ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் அகில் போன்றவரையும் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நேஹல் போன்ற இருவரையும் கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகை மற்றும் 6.75 லட்சம் பணம் போன்றவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தன்ராஜ் சவுத்ரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரை திருடி தப்பி சென்றுள்ளனர். இதற்கிடையே சீர்காழி அருகே எருக்கூர்சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் கொலையில் ஈடுபட்ட மனிஷ், ரமேஷ் பட்டேல், மஹிபால் சிங் போன்ற மூன்று பேரையும் மயிலாடுதுறை மாவட்ட அப்போதய எஸ்பி ஸ்ரீ நாதா தலைமையில் கொண்ட போலீசார் பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அதிரடிப்படை வீரர் சாலிம் என்பவரை கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலம் அகோரி கிராமத்தை சேர்ந்த மஹிபால் சிங் போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கு மறைந்திருந்த ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த மணிஷ் ராஜஸ்தான் மாநிலம் கங்காவாஸ் பகுதியை சேர்ந்த ரமேஷ் பட்டேல் போன்ற இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது பற்றி கொலை கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மணி ரமேஷ் பட்டேல் மற்றும் இதில் தொடர்புடைய கும்பகோணம் கருணாகரன் போன்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் மனிஷ் தலைவராக ராஜஸ்தானில் இருந்துள்ளார் அவரை பிடிப்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் தீரன் படபாணியில் ராஜஸ்தான் மாநிலம் வரை  சென்றுள்ளனர். மேலும் அங்கு சில நாட்கள் தங்கி இருந்து மணிஷ் பற்றிய தகவல்களை அந்த மாநில போலீசாரின் உதவியுடன் திரட்டி அதன் பின் மணி கைது செய்து விமான மூலமாக இன்று அதிகாலை சென்னை கொண்டு வந்து அதன் பின் சீர்காழி காவல் நிலையம் கொண்டு வந்திருக்கின்றனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |