Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“முத்தாரம்மன் ரத வீதி விழா” திரளான பக்தர்கள் தரிசனம்….!!

தூத்துக்குடி மாவத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதம் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Categories

Tech |