Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொன் சப்பரத்தில் வீதி உலா வந்த அம்மன்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவுக்கு கடந்த 6-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11-ந் தேதி கோவில் கொடைவிழா தொடங்கி 8-வது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு வில்லிசை, கும்ப கரகாட்டம், 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் கோவிலில் சேர்க்கும் நிகழ்ச்சி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு வானவேடிக்கை,  நள்ளிரவு 1 மணிக்கு பொன் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.

நேற்று காலை 8 மணிக்கு மஞ்சள் பால் நீராட்டுதல், 10 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்தனர். பின்னர் பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு 8 மணிக்கு சினிமா இசை குழுவினருடன் பாட்டு கச்சேரி நடைபெற்றுள்ளது. இந்த விழா ஏற்பாடுகளை அந்த  ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories

Tech |