நானே வருவேன் திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 3 திரைப்படங்களும் வெளியாகி தோல்வியை சந்தித்த நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படம் கடந்த மாதம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதே தேதியில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ரிலீஸ் ஆவதால், நானே வருவேன் திரைப்படத்திற்கு போதுமான அளவு திரையரங்குகள் கிடைக்காது எனவும் அதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளது எனவும் ஒரு தகவல் வெளியானது.
இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கலைப்புலி எஸ். தாணு தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொன்னபடி, நானே வருவேன் செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த டீசர் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி #NaaneVaruvean செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த teaser வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்.@dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @theedittable @saregamasouth pic.twitter.com/eknZsT9ZzS
— Kalaippuli S Thanu (@theVcreations) September 13, 2022