Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”…. டி.ராஜேந்தர் பெருமிதம்…!!!!!

வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.

இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி(நாளை) வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணலை பார்த்தேன். அதில் சிம்புவின் உழைப்பை பற்றி கூறியிருந்தார். அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இத்திரைப்படத்தில் 20 வயது இளைஞனாக சிம்பு நடிப்பாரா என முதலில் சந்தேகம் இருந்தது.

ஆனால் இயக்குனர் கௌதமேனன் சிம்பு நடித்தால் சரியாக இருக்கும் என சிம்பு கூறியதால் தனது உடலை வருத்தி எடையை குறைத்து கதாபாத்திரத்திற்கான போட்டோஷூட் எடுத்து அப்படத்தை ஜெயமோகனிடம் காண்பித்தார். இதை பார்த்து ஜெயமோகன் சிம்பு 18 வயது இளைஞனாக மாறிவிட்டதாக கூறினார். ஜெயமோகன் போன்ற ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் சிம்புவை பாராட்டியதை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என டி.ராஜேந்திரன் கூறியுள்ளார். மேலும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய இறைவனை பிராத்திப்பதாகவும் ஊடகத்துறையான உங்களின் ஆதரவு என்றும் வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |