Categories
தேசிய செய்திகள்

புதிய வந்தே பாரத் ரயில்கள்… செப்டம்பர் 30 முதல்… இந்த வழித்தடங்களில்..!!!!.

ரயில்வேயின் தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதிவேக ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்றது. மேலும் அதிவேக ரயில்கள் பயணிகளின் விருப்பமாக இருக்கின்ற நிலையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே தரப்பில் இருந்து விதிகளும் மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதலாக அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு வருகின்றது. வந்தே பாரத் வந்தே பாரத் 2 என்ற செமி ஹை ஸ்பீட் ரயிலின் மேம்படுத்தப்பட்ட ரயில் சேவையை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய வந்தே பாரத் 2 பல அம்சங்கள் ஏற்கனவே இருக்கும் வந்தே பாரத் ரயில்களில் மேம்படுத்தப்பட்டதாகும். இந்த ரயில் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு கொடியத்து தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும் இது பற்றிய ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் புதிய வந்தே பாரத் காரின் பயணிகள் கட்டணம் பற்றி அறிந்து கொள்ள மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கிறது. மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் எக்ஸிக்யூடிவ் வகுப்பிற்கு பயணிகள் அடிப்படை கட்டணமாக 2349 ரூபாய் செலுத்த வேண்டும் என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் நாற்காலி வசதி கொண்ட ஷேர் காரின் அடிப்படைக் கட்டணம் 114 எனும் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய வந்தே பாரத் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இரண்டு நிலையங்களில் நிறுத்தப்படும். இது நாட்டின் இரண்டு பொருளாதார நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை பெரிதும் குறைக்கின்றது. ரயில்வே முடிவு செய்து இருக்கின்ற கட்டணத்தில் வந்தே பாரத் பயணிகள் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் அடிப்படை கட்டணத்தை விட 14 மடங்கு செலுத்த வேண்டும்.

மேலும் அகமதாபாத்தில் இருந்து சூரத்திற்கு வந்தே பாரத் வகுப்பின் அடிப்படை கட்டணம் 1312 ஆகவும் நாற்காலி வசதி கொண்ட ஷேர் காருக்கு 634 ஆகவும் இருக்கும் எக்ஸிக்யூட்டி வகுப்பில் சூரத்தில் இருந்து மும்பைக்கு அடிப்படை கட்டணம் 1,522 ஆகவும் நாற்காலி வசதி கொண்ட ஷேர் கார் 739 ஆகவும் இருக்கிறது. சென்னை ஐ சி எப் வடிவமைத்திருக்கின்ற புதிய வந்தே பாரத் அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. ஆனால் தற்போது ரயில் பாதையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது இதில் முதல் வழி புது தில்லியில் உள்ள கத்ராவுக்கும் இடையில் ஆனது இரண்டாவது வழி புதுதில்லியிலிருந்து வாரணாசிக்கும் செல்கிறது. புதிய வந்தே பாரத் ரயில்கள் குறைந்த எடை கொண்டது தேவைக்கு ஏற்ப 32 இன்ச் led டிவிகளை வைபை மூலம் இயக்கும் வசதி கிடைக்கிறது இந்த ரயிலில் கேடலிங் அல்ட்ரா வயலட் காற்று சுத்திகரிப்பு அமைப்பும் பொருத்தப்பட்டிருக்கிறது.

Categories

Tech |