சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரியில் அவர் தெரிவித்திருப்பதாவது: |எனக்கு சிறுவயது முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்தேன். பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில் டிஎன் 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண் வேண்டும் என்று இருந்தது. இதையடுத்து நான் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன்.
அப்போது பேசிய நபர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகளை தேர்வு செய்ய போட்டி நடப்பதாக கூறினார். அதையடுத்து நான் அங்கு சென்றேன். அங்கு பார்த்திபன் என்பவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர் அரசியல் அமைப்பு ஒன்றில் மாநில செயலாளராகவும் இருந்தார். பார்த்திபன் ஒவ்வொரு பெண்களாக அறைக்குள் அழைத்து நடிகை தேர்வு செய்தார். என்னை அழைத்தபோது நான் உள்ளே சென்றேன். அங்கிருந்த பார்த்திபன் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்த சில நிமிடத்தில் நான் மயங்கினேன்.
சுயநினைவு இல்லாமல் இருந்த என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மயக்கம் தெளிந்த பிறகு இது குறித்து கேட்டபோது உனக்கு தற்போது 17 வயது ஆகிறது, 18 வயதில் நிறைவடைந்த உடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அவர் என்னை படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை பேசினார். இந்த ஆசை வார்த்தை கூறிய அவர் என்னை பலமுறை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன் .உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்தேன்.
ஆனால் அவர் குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என்று கூறி சில மாத்திரைகளை வாங்கி கொடுத்த எனது கர்ப்பத்தை கலைத்தார், பின்னர் அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். மேலும் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார். வழக்கு பதிவு செய்தபுகாரின் பேரில் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.