சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபு அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் இருக்கின்றார்கள். இந்த அனுபவம் பற்றி சவுதிக்கு சொந்தமான எம்பிசி தொலைக்காட்சிக்கு அபு அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது முதன் முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன் நாங்கள் இருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கினோம். ஆனால் திடீரென எங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தொடர்ந்து தகராறு மன வருத்தம் போன்றவை இருந்தது. அதிலிருந்து விடுபடுவதற்காக நான் இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இந்த சூழலில் இரண்டாவது மனைவியுடன் கருத்து வேறுபாடு வந்து விட்டது. முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் ஒத்துப் போகவில்லை. அதனால் இரண்டு மனைவிகளுடன் ஏற்பட்ட பிரச்சனையை மறப்பதற்காக மூன்றாவது திருமணம் செய்து கொண்டேன் இவ்வாறு ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு மொத்தம் 53 திருமணம் வரை செய்து இருக்கின்றேன்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி நான் உடல் சுகத்திற்காக இத்தனை திருமணங்களை செய்து கொள்ளவில்லை. மனரீதியாக நான் நிம்மதியாக இருக்க வேண்டும் மனம் ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொண்டேன். மேலும் நான் மணமுடித்த அத்தனை பெண்களும் பேரழகு என தெரிவித்துள்ளார் அதாவது அப்துல்லா கல்யாணம் செய்த எல்லா மாணவிகளிலும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம் எந்த பிரச்சினையும் மனைவியுடன் பேசு தீர்த்துக் கொள்ள அவர் விரும்பவில்லை என தெரிகின்றதும் சண்டையிலிருந்து விலகி விட வேண்டும் மன நிம்மதியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அடுத்தடுத்த திருமணங்களை இவர் செய்ததாக கூறியுள்ளது ஆச்சரியத்தை தருகிறது. இவர் 20 வயது முதல் கல்யாணம் செய்ய தொடங்கியுள்ளார்.
அனைத்து திருமணங்களையும் பாரம்பரிய முறைப்படி செய்து இருக்கின்றார் பெரும்பாலும் சவுதியில் இந்த திருமணங்கள் நடைபெற்று உள்ளது. அதில் முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு நாள் வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கேயே வெளிநாட்டு பெண்ணை பார்த்து பிடித்து போய் உடனே அவரையும் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால் இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என தற்போது முடிவெடுத்து விட்டாராம் சவுதி அரேபியா மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சமீப காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. அதிகரித்து வருகின்ற வாழ்க்கை செலவுகள் மற்றும் குழந்தை பேரு கல்வி சுகாதாரம் மற்றும் போக்குவரத்திற்கான தேவைகளும் குறைவதற்கு இதற்கான காரணமாகும்.