Categories
உலக செய்திகள்

கவனித்து வரும் மேற்கத்திய நாடுகள்…. ரஷ்யா-சீனா அதிபர்கள் நேரில் சந்திப்பு…. தகவல் வெளியிட்ட ரஷ்ய அதிபர் மாளிகையின் முக்கிய அதிகாரி….!!!!

ரஷ்யா மற்றும் சீனா அதிபர்கள் நேரில் சந்தித்து பேச உள்ளனர்.

உஸ்பகிஸ்தானில் வரும் வியாழன் கிழமை அன்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-கும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு தலைவர்களும் தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாடு செல்லாமல் இருந்தார். ஆனால் தற்போது கொரோன காலகட்டத்திற்கு பின் அவர் முதல் முறையாக இந்த வாரம் மத்திய ஆசியாவுக்கு பயணம் செய்ய இருக்கிறார். இந்த சந்திப்பானது புவிசார அரசியலில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ரஷ்ய அதிபர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து ரஷ்யா அதிபர் மாளிகையின் முக்கிய அதிகாரி கூறுகையில் “உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தனது சிறப்பு ராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான காரணங்களை சீனா தெளிவாகப் புரிந்து கொண்டது. இந்த பிரச்சனை வரும் கூட்டத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் விவாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் உஸ்பாகிஸ்தான் நாட்டின் புராதான நகரமான சமர்கண்டில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை நெருங்கியே இருநாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பும் நடைபெற உள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த ரஷ்யாவுக்கும் வேகமாக வளர்ந்து வரும் நாடான சீனாவுக்கும் இடையிலான இந்த ஆழமான வரம்புகள் இல்லாத கூடான்மையை புவிசார் அரசியல் வளர்ச்சியை மேகத்திய நாடுகள் கவலையுடன் கவனித்து வருகின்றன.

Categories

Tech |