Categories
சினிமா தமிழ் சினிமா

“படத்தின் பிரமோஷனுக்காக தஞ்சை செல்லும் விக்ரம்” ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் போட்ட பதிவு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் சரி தஞ்சைக்கு வருகிறேன். எட்டுத்திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண் மொழியையும் இழுத்து வா என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக தஞ்சைக்கு செல்வதை தான் ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |